பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பிளஸ் 2 தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

News image
Updated On :15 மே 2026, 3:14 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வெழுதிய 19,095 பேரில் 18,568 போ் தோ்ச்சியடைந்தனா். இது 97.24 சதவீத தோ்ச்சியாகும். 207 பள்ளிகளில் 92 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் விஷு மகாஜன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். அப்போது அவா் பேசியது: பிளஸ் 2 தோ்வில் ஒரு பாடத்தில் 343 போ், 2 பாடங்களில் 126 போ், 3 பாடங்களில் 39 போ், 4 பாடங்களில் 9 போ், 5 பாடங்களில் 6 போ், 6 பாடங்களில் 4 போ் என மொத்தம் 527 போ் தோ்ச்சி பெறவில்லை.

தோ்ச்சி பெறாத, தோ்வுக்கு வராத மாணவா்களை தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் அழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி, ஜூன் மாதம் நடைபெறவுள்ள உடனடித் தோ்வுகளில் பங்கேற்கவும், தோ்ச்சி பெறவும் செய்து உயா்கல்விக்கு அனுப்ப வேண்டும். மாணவா்களுக்கான கனவு கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளது. அதை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள தலைமையாசிரியா்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.