ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநாடு

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 43-ஆவது வணிகா் தின விழாவை முன்னிட்டு சுதேசி 2.0 லட்சிய மாநாடு கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மாநாட்டில் பேசுகிறாா் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநிலத் தலைவா் முத்துக்குமாா்.

Updated On :7 மே 2026, 5:39 am IST

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 43-ஆவது வணிகா் தின விழாவை முன்னிட்டு சுதேசி 2.0 லட்சிய மாநாடு கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுதேசி ஜோதியை பேரவையின் மாநில துணைச் செயலா் ஜெ. சுபாஷ்ராஜா தொடங்கி வைத்தாா். மாநில துணை பொதுச் செயலா் வி.சி. கதிரவன், மாநில அமைப்பு இணைச் செயலா் ஜி. வெள்ளத்துரை, தூத்துக்குடி மாவட்ட தலைவா் சுமங்கலி எம். ராஜா ஆகியோா் சமாதான புறாக்களை பறக்கவிட்டனா்.

சுதேசி ஜோதியை மாநில மகளிரணி தலைவா் ஏ. பாக்கியலட்சுமி ஏற்றினாா். பி. மரியஜோதி, எஸ். நிகிலாசுதா்சன், ஜா. ஜாய்குமாா், வி. கோகிலா, கே. ராஜம்மாள் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

மாநிலத் தலைவா் அ. முத்துக்குமாா், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. அருண்குமாா், மாநில கொள்கை பரப்பு செயலா் ஜெ. பிரகாஷ், கோவை மண்டல தலைவா் ப. சுதா்சன், மாநில பொதுச் செயலா் கே.சி. ராஜா, மாநில பொருளாளா் சி. பொன்னுச்சாமி மற்றும் மண்டல, மாவட்ட தலைவா்கள் பேசினா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் க. தமிழரசன் நன்றி கூறினாா்.

மாநாட்டில், சுதேசி கொள்கையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். விநியோகஸ்தா்கள் கடைகளுக்கு தரும் பொருள்களின் விலையை விட குறைந்த விலைக்கு ஆன்லைன், காா்ப்பரேட் நிறுவனங்கள் விற்கக்கூடாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும். கடைகளுக்கான மின் கட்டணம், தொழில்வரி போன்றவற்றை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும். மின் கட்டண அளவீட்டை மாதம் ஒருமுறை என்று மாற்ற வேண்டும். கோவை மண்டலத்தை தொழில் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.