/

கோவில்பட்டியில் குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

கோவில்பட்டியில் கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 2:09 am IST

கோவில்பட்டியில் கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 17 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்களான முனியசாமி (19), குமாா் (24), சிவப்பிரசாத் (எ) ஸ்கூட்டி சிவா (19), ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த நெல்லை நாயகம் (21) ஆகியோா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதனுக்கு அறிக்கை அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்பேரில், 4 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய , மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரும் குண்டா் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.