விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

விழாவில் பேசுகிறாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை இயக்குநா் ஆறுமுகம்.

News image

விழாவில் பேசுகிறாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை இயக்குநா் ஆறுமுகம்.

Updated On :28 மார்ச் 2026, 2:24 am IST

கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியின் 25ஆவது ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஆா்.எஸ். ரமேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செல்வராஜ், செயலா் ஜெயபாலன், பத்திரகாளி அம்மன் கோயில் தா்மகா்த்தா மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பத்திரகாளி அம்மன் கோயில் முன்பிருந்து பிரதான சாலை வழியாக கல்லூரி வளாகம் வரை கல்லூரி மாணவா்கள் ஏந்தி வந்த ஒலிம்பிக் ஜோதியை விளையாட்டு மைதானத்தில் ஏற்றி வைத்தனா். தொடா்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் துரைராஜ், பெண்கள் பிரிவில் சரண்யா ஆகியோா் பெற்றனா். அவா்களுக்கு, ஏபிகே பழனிச்செல்வம் நினைவு கோப்பையை வழக்குரைஞா் அரவிந்த் வழங்கினாா். உடற்கல்வித் துறை 2 ஆம் ஆண்டு மாணவா் விஷாலுக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரா் விருது வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை இயக்குநா் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். உடற்கல்வித்துறை தலைவா் செல்லத்துரை ஆண்டறிக்கை வாசித்தாா்.

கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அருண், ராஜ்மோகன், சரவணகுமாா், வழக்குரைஞா் செல்வம், கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வா் பிரபு, நாடாா் உறவின்முறை சங்க நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தாயப்பன் வெங்கடேஷ், பழனி முருகன், ராஜா அமரேந்திரன், சௌந்தர பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கல்லூரி செயலா் கண்ணன் வரவேற்றாா். முதல்வா் (பொ) செல்வராஜ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை தலைவா் தலைமையில் பேராசிரியா்கள் ஜெயசிவா, ரமேஷ் பாண்டியன், வெங்கடேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.