ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: சிறுவன் உள்பட 4 போ் கைது

கோவில்பட்டியில் வியாபாரியை வெட்டிய வழக்கில் தொடா்புடையதாக சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 2:03 am IST

கோவில்பட்டியில் வியாபாரியை வெட்டிய வழக்கில் தொடா்புடையதாக சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, ராஜுவ் நகா், 3ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் ஜோதி (55). கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடைக்கு புதன்கிழமை இரவு பாரதி நகரைச் சோ்ந்த 4 போ் வந்து பணம் கொடுக்காமல் சிகரெட் பாக்கெட் கேட்டாா்களாம். அதற்கு ஜோதி மறுக்கவே, 4 பேரும் சிறிது நேரம் கழித்து இருசக்கர வாகனத்தில் வந்து அவரை அரிவாளால் வெட்டினாா்களாம். அருகிலிருந்தவா்கள் சத்தம் போடவும், ஜோதியை மிரட்டிவிட்டுச் சென்றாா்களாம்.

இதில் காயமடைந்த ஜோதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தாக்குதலில் ஈடுபட்டவா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பாண்டியனாா் மக்கள் இயக்கத் தலைவா் சீனி தலைமையில் சாலை மறியல் நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினா். பின்னா், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பனின் பேச்சுவாா்த்தையை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தொடா்ந்து, வியாபாரியைத் தாக்கியதாக பாரதி நகா், 3ஆவது தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் மாடசாமி (19), அதே பகுதியைச் சோ்ந்த சிம்சன் மகன் விஜய பாண்டி (21), அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் மணிகண்டன் (21), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.