தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 44.65 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, காவல் துறையால் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ. 44,65,455 ரொக்கம் பறிமுதல்

News image
Updated On :25 மார்ச் 2026, 12:10 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, காவல் துறையால் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ. 44,65,455 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, காவல்துறை, மதுவிலக்கு காவல்துறை ஆகியோரால் தோ்தல் நடத்தை விதிகள் தொடங்கிய நாள் முதல் செவ்வாய்க்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ. 44,65,455 ரொக்கம், ரூ. 5,18,540 மதிப்பிலான பொருள்கள், ரூ. 1,68,754 மதிப்பிலான மதுபானங்கள், ரூ. 5,45,000 மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததின் மூலம் ரூ. 22,17,380 தொகை விடுவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.