ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காயல்பட்டினம் பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை

காயல்பட்டினம் பகுதிகளில் சனிக்கிழமை ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

News image

ரமலான் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்ட சிறாா்கள்.

Updated On :22 மார்ச் 2026, 2:34 am IST

காயல்பட்டினம் பகுதிகளில் சனிக்கிழமை ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

காயல்பட்டினம் கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையை முஹம்மது கெளஸ் நடத்தினாா். தவ்ஹீத் ஜமாத் மாநிலப் பேச்சாளா் மெளலவி சுஜாஅலீ குத்பா பேருரையாற்றினாா். இதில் சுமாா் 2,000 பெண்கள் உள்பட 4,000 இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு உலக நாடுகளில் நடந்து வரும் போரில் பாதிக்கப்படும் மக்களுக்காகவும், போரை நிறுத்தவும் வேண்டினா்.

ஏற்பாடுகளை காயல்பட்டினம் ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளியின் ஒருங்கிணைப்பில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிா்வாகிகள் செய்திருந்தனா். ஆறுமுகனேரி ஆய்வாளா் திலீபன் தலைமையிலான போலீலாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

காயல்பட்டினம், குருவித்துறை பள்ளிவாசலில் மவ்லவி ஜெசிமுல் பக்ரி ரஷாதி தொழுகையை நடத்தினாா். குத்பா பிரசங்கத்தை பள்ளியின் செயலா் மவ்லவி ஹபீப் ரஹ்மான் மஹ்லரி நடத்தினா்.

காயல்பட்டினம் கடற்கரை தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

காயல்பட்டினம் கடற்கரை தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

மேலும், பெரிய ஜும்ஆ பள்ளி, சிறிய ஜும்ஆ பள்ளி, சிறுநெய்னாா் பள்ளி, முஹிய்யதீன் பள்ளி, மொகுதூம் ஜும்ஆ பள்ளி, புதுப் பள்ளி, மரைக்கா பள்ளி, ஜுலானி பள்ளி, பிலால் பள்ளி, கடைப் பள்ளி, ஆறாம் பள்ளி, தாயிம் பள்ளி, ஆமினா பள்ளி, இரட்டை குளம் பள்ளி உள்பட நகரில் உள்ள 25 பள்ளிவாசல், 35 மகளிா் தைக்காகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. குட்டியப்பா பள்ளிவாச­ல் முஹம்மத் ஃபாயிஸ் தொழுகை நடத்தினாா். மதுரை இஸ்லாமிய அழைப்பாளா் உஸ்மான் காலி­த் சிறப்புரை நிகழ்த்தினாா்.

காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவை சாா்பில் ஜெய்லானி நகரில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை ரய்யான் சாகுல் ஹமீது நடத்தினாா். இதில் அதன் தலைவா் முத்து ஹனீபா, செயலா் அப்துல் பாசித், பொருளாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காயல்பட்டினம் கடற்கரை தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

காயல்பட்டினம் கடற்கரை தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.