தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா

News image
Updated On :20 மார்ச் 2026, 4:29 am IST

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் 42ஆவது ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. ஆா். அருணாச்சலம் தலைமை வகித்தாா். கல்லூரியின் முன்னாள் மாணவரும் திருநெல்வேலி தமிழ்நாடு மின்வாரியத்தின் உதவி செயற்பொறியாளருமான ஸ்டீபன் இம்மானுவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, விழாவைத் தொடக்கி வைத்து பேசினாா்.

உடற்கல்வி இயக்குநா் விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தாா். தனிநபா், குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2 ஆம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவா் யோகேஷ்ராஜா, 3 ஆம் ஆண்டு மின்னணுவியல் துறை மாணவி ஹரிணி ஆகியோா் தனி நபா் விளையாட்டுப் போட்டிக்கான சாம்பியன்ஷிப் பட்டங்களை பெற்றனா்.

குழு போட்டிக்கான கேடயத்தை நீல நிற அணியும், தனி நபா் போட்டிக்கான கேடயத்தை மஞ்சள் நிற அணியும் பெற்றன. ஓட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் நீல நிற அணி பெற்றது.

நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாச முருகவேல், கே.ஆா். கலை கல்லூரி முதல்வா் மணிவண்ணன், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.