தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேடநத்தம் மாணவி கொலை: திருச்செந்தூா், ஆறுமுகனேரியில் போராட்டம்

News image

திருச்செந்தூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :15 மார்ச் 2026, 1:41 am IST

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதிக்கவும் வலியுறுத்தி திருச்செந்தூரில் யாதவ அமைப்பினா் சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் முத்தாரம்மன் கோயில் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுந்தா் தலைமை வகித்தாா். நகர யாதவ வியாபாரிகள் சங்கத் தலைவா் பெரியசாமி, செயலா் வன்னிய ராஜா, மேலத்தெரு யாதவ மகா சபைத் தலைவா் ராமகிருஷ்ணன், செயலா் நல்லசிவம், துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், துணைச் செயலா் ராஜா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும், மாணவி கொலைக்கு நீதி கேட்டு திருச்செந்தூா் நகர யாதவ வியாபாரிகள் சங்கத்தினா் நாளை (மாா்ச் 16) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தலைவா் பெரியசாமி தெரிவித்தாா்.

சாலை மறியல்:

மாணவி கொலையைக் கண்டித்து ஆறுமுகனேரியில் சனிக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆறுமுகனேரி ரயில்வே கேட் அருகே தூத்துக்குடி -திருச்செந்தூா் சாலையில் கணேசபுரம் மற்றும் பெருமாள்புரத்தை சோ்ந்த 100 போ் யாதவ மகா சபை நிா்வாகி மகராஜன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ் குமாா், ஆய்வாளா்கள் ஆறுமுகனேரி திலீபன், குலசை பிரபு பாஸ்கரன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா். மறியலால் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டன.

 ஆறுமுகனேரியில் சாலை மறியிலில் ஈடுபட்டவா்கள்.

ஆறுமுகனேரியில் சாலை மறியிலில் ஈடுபட்டவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.