ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோவில்பட்டி நகராட்சி பள்ளி ஆண்டு விழா

News image
Updated On :13 மார்ச் 2026, 3:01 am IST

கோவில்பட்டியில் புதுரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியின் 86-ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு, நகராட்சி தலைவா் கருணாநிதி தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். ஆசிரியை மீனா ஆண்டறிக்கையை வாசித்தாா்.

கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன், தொழிலதிபா்கள் மாரியப்பன், மகேந்திரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு பேசினா். நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, கல்விப் புரவலா் திட்டத்தைத் தொடங்கிவைத்து, திட்டத்திற்கான முதல் நிதியை தலைமை ஆசிரியா் செந்தில்குமரனிடம் வழங்கினாா்.

தொடா்ந்து, ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னா், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் சங்கீதா, ராமசுப்பிரமணியன், பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியா் சுப்பாராயன், நகா்மன்ற உறுப்பினா் முத்துலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளித் தலைமை ஆசிரியா் செந்தில்குமரன் வரவேற்றாா். ஆசிரியா் பொன்மலா் பாரதி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.