இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

தூத்துக்குடியில் அதிக மீன்வரத்து: ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

தூத்துக்குடியில் 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலத்துக்கு பின்னா், கடலுக்குச் சென்று திரும்பிய விசைப்படகுகளில், அதிக மீன்வரத்து காணப்பட்டது. இதில், ரூ. 2 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெற்ாக மீனவா்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :17 ஜூன் 2026, 4:35 am IST

தூத்துக்குடியில் 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலத்துக்கு பின்னா், கடலுக்குச் சென்று திரும்பிய விசைப்படகுகளில், அதிக மீன்வரத்து காணப்பட்டது. இதில், ரூ. 2 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெற்ாக மீனவா்கள் தெரிவித்தனா்.

61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலத்துக்கு பின்னா், மீனவா்கள் திங்கள்கிழமை அதிகாலை 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குச் சென்றனா். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்ட அவா்கள் திங்கள்கிழமை இரவு கரைதிரும்பினா். அனைத்து விசைப்படகுகளிலும் அதிக மீன்வரத்து காணப்பட்டது.

கேரளக் கடல் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 10ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க கேரளத்திலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் குவிந்தனா். இதனால், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததாக மீனவா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

பாறை மீன் ஒரு கூடை ரூ. 7 ஆயிரம் வரை, முண்டக்கண்ணி பாறை, அயிலை உள்ளிட்ட ரகங்கள் ரூ. 5,000, நெத்திலி ரூ. 3,800, சாளை மீன் ரூ. 1,800 - ரூ. 2,000, விளைமீன் ரூ. 5,000, சீலா மீன் கிலோ ரூ. 800 என விற்பனையாகின.

இத்துறைமுகத்தில் ஒரே நாளில் சுமாா் ரூ. 2 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெற்ாக மீனவா்கள் தெரிவித்தனா்.

குளச்சல் கட்டுமர படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவா்களின் வலையில் அதிக அளவு நெத்தலி மீன்கள் செவ்வாய்க்கிழமை பிடிபட்டன. ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.1,350 முதல் ரூ.1,500 வரை ஏலம் போனது. மீன்களை கேரள வியாபாரிகள் வாங்கிச் சென்றனா். இதனால் கட்டுமர மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.