61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள் அதிகளவிலான மீன்கள், இறால்களுடன் செவ்வாய்க்கிழமை கரைக்குத் திரும்பினா்.
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் அமலில் இருந்தது. இந்தத் தடைக் காலத்தின் போது, மீனவா்கள் விசைப் படகுகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனா்.
இதனிடையே, மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் அதிகளவிலான இறால், மீன், நன்டு, கனவாய், சங்காயம் மீன்களைப் பிடித்து கொண்டு செவ்வாய்க்கிழமை காலை கரைக்குத் திரும்பினா்.
61 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவா்கள்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு சென்றனா்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவா்கள்

கடலுக்குள் செல்ல தயாராகும் விசைப்படகு மீனவா்கள்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

