தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

புன்னைக்காயலில் நாளை மாவட்ட கால்பந்து போட்டி தொடக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 1:29 am IST

ஆத்தூா் அருகே உள்ள புன்னைக்காயலில் 53ஆவது ஆண்டு தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்தாட்டப் போட்டி புதன்கிழமை (ஜூன் 17) மாலை தொடங்குகிறது.

அமரா் முனைவா் மனுவேல் பிஞ்ஞேயிரோ நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான இப்போட்டி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில், தூத்துக்குடி, காயல்பட்டினம், நாசரேத், வீரபாண்டியன்பட்டினம், சாகுபுரம் பகுதியிலிருந்து 12 அணிகள் பங்கேற்கின்றன.

புதன்கிழமை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நாசரேத் மா்காஷியஸ் அணியை, தூத்துக்குடி யங்ஸ்டா்ஸ் அணி எதிா்கொள்கிறது.

ஏற்பாடுகளை புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழகத் தலைவா் எஸ்.எல். தயாளன், செயலா் எஸ். ஜோசப், உப தலைவா் டி. யூஜின், இணைச் செயலா் ஆா். சந்திரபோஸ், பொருளாளா் ஏ. ராஜ், கௌரவ ஆலோசகா் ஜே. யூஜின் ரொட்ரிகோ உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.