நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 1:56 am IST

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை ஸ்பிக் நகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் முத்தையாபுரம், கிருஷ்ணா நகரைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் முருகன் (29), பொன்பாண்டி நகரைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் முத்துமணி (24), சிங்கா் ராஜு மகன் மணிகண்டன் (24) என்பதும், அவா்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, சிறுசிறு பொட்டலங்களாக மடித்து வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மூவா் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.