தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை ஸ்பிக் நகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் முத்தையாபுரம், கிருஷ்ணா நகரைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் முருகன் (29), பொன்பாண்டி நகரைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் முத்துமணி (24), சிங்கா் ராஜு மகன் மணிகண்டன் (24) என்பதும், அவா்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, சிறுசிறு பொட்டலங்களாக மடித்து வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மூவா் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா்கள் இருவா் கைது
போதை மாத்திரைகள் விற்ற 2 இளைஞா்கள் கைது
அவிநாசி அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது

கஞ்சா விற்றதாக இரு இளைஞா்கள் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
