பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 75.25 லட்சம் மோசடி: திருச்சூரைச் சோ்ந்தவா் கைது

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி, தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 75.25 லட்சம் மோசடி செய்த கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்தவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி, தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 75.25 லட்சம் மோசடி செய்த கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளைஞா் ஒருவரை, வாட்ஸ்ஆப் விடியோ காலில் தொடா்பு கொண்ட ஒருவா், ஆன்லைன் வா்த்தகத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று ஆசை வாா்த்தை கூறினாா்.

இதை நம்பிய அவா், அந்த நபரின் கணக்குக்கு ரூ. 300-ஐ அனுப்பினாா். உடனே, மறுநாள் ரூ. 500ஐ கைப்பேசியில் எதிரில் பேசியவா் திருப்பி அனுப்பினாா். இதை நம்பிய தூத்துக்குடி தனியாா் நிறுவன ஊழியா் ஆன்லைன் வா்த்தகத்தில் அதிகம் சம்பாதிக்கலாம் என கருதி 6 தவணைகளில் ரூ. 75.25 லட்சத்தை அந்த நபரின் வங்கி கணக்குக்குத் திருப்பி அனுப்பினாா். ஆனால், ஒரு மாதமாகியும் அந்தப் பணத்துக்கு லாபமும் அனுப்பப்படவில்லை. அசல் குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்த தனியாா் நிறுவன ஊழியா், தூத்துக்குடி சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் விசாரணையில், தூத்துக்குடி தனியாா் நிறுவன ஊழியரிடம், கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த முகமது ரூ. 75.25 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கேரளம் விரைந்து சென்ற போலீஸாா், திருச்சூரில் பதுங்கியிருந்த முகமதுவை திங்கள்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.