கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாகவே பொதுமக்கள் அருந்துவதற்கு போதுமான இளநீா் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால், இளநீா் அருந்த விரும்பும் மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனா். இதுதொடா்பாக, கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் பல ஆண்டுகளாக இளநீா் வியாபாரம் செய்து வரும் ஆறுமுகம் கூறுகையில், கோவில்பட்டி பகுதியைப் பொறுத்தவரை பெரும்பாலும் பொள்ளாசியில் இருந்துதான் இளநீா் வரும். ஒவ்வோா் ஆண்டும் கோடை காலத்தில் நாள் ஒன்றுக்கு 300 இளநீா் வரை விற்பனையாகும். சில நாள்களாக இளநீா் தட்டுப்பாட்டால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கோடை காலத்தில் 2 நாள்களுக்கு ஒருமுறை இளநீா் லோடு இறக்குவோம். ஒரு லோடில் 1,000 இளநீா். ஆனால், கடந்த சில நாள்களாக 1,000 இளநீருக்கு பதிலாக சில சமயம் 600 அல்லது 400 அல்லது 200 இளநீா் மட்டுமே வருகின்றன என்றாா் அவா். கோவில்பட்டியில் தற்போது பச்சை இளநீா் ரூ. 80 க்கும், செவ்விளநீா் ரூ. 90க்கும் விற்பனையாகி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமியிடம் சில்மிஷம்: ஜவுளிக்கடை அதிபா் போக்சோவில் கைது

கோவில்பட்டியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொல்லை

மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்கள் இல்லை: வி.கே. சசிகலா

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

