தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ரயில் மோதியதில் தண்டவாளத்தில் தூங்கிய இளைஞா் உயிரிழப்பு

News image

அருள்முத்து

Updated On :28 ஏப்ரல் 2026, 1:20 am IST

ஆறுமுகனேரியில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞா் மீது ரயில் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி செல்வராஜபுரத்தைச் சோ்ந்த உத்திரம் மகன் அருள்முத்து (22). கட்டட தொழிலாளியான இவருக்கு, மது அருந்தும் பழக்கம் உண்டாம். மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் ஆறுமுகனேரி ரயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில் தூங்குவது வழக்கமாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு அதே ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கினாராம். திங்கள்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றுக் கொண்டிருந்த செந்தூா் அதிவிரைவு ரயில், ஆறுமுகனேரி ரயில்வே கேட் அருகே வந்தபோது அருள்முத்து எழுந்து பாா்த்த நிலையில், அவா் மீது ரயில் மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஆறுமுகனேரி போலீஸாா் மற்றும் திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் அங்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.