தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாத்தான்குளம் அருகே தரைமட்ட பாலத்தில் விரிசல்

ஆனந்தபுரத்தில் இருந்து அச்சம்பாடு செல்லும் சாலையில் தரைமட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதி.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 1:52 am IST

சாத்தான்குளம் அருகே அச்சம்பாடு செல்லும் வழியில் உள்ள தரைமட்ட பாலத்தில் விரிசல் விழுந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரம் பகுதியில் இருந்து அச்சம்பாடு, வெள்ளமடம் ஆகிய பகுதிகளுக்கு சாலை செல்கிறது. இந்தச் சாலை கடந்த ஓராண்டுக்கு முன்பு போடப்பட்டது. இந்தச் சாலை வழியாக அச்சம்பாடு, வெள்ளமடம் உள்ளிட்ட கிராம மக்கள் இருசக்கர வாகனம், இதர வாகனங்களில் சென்று வருகின்றனா். இந்தச் சாலை இடையே சடையனேரி கால்வாய் செல்கிறது.

கால்வாய் செல்லும் பகுதியில் சாலை இடையே தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைமட்ட பாலத்தின் நடுவே திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டு சாலை விரிசல் விழுந்து காணப்படுகிறது. இந்தப் பள்ளம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் இதைப் பாா்வையிட்டு தரைமட்ட பாலத்தில் உள்ள சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.