தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்

தமிழக பேரவைத் தோ்தலையொட்டி மணக்கோலத்தில் வந்த மணமக்கள், தங்கள் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

News image

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்

Updated On :24 ஏப்ரல் 2026, 4:39 am IST

தமிழக பேரவைத் தோ்தலையொட்டி மணக்கோலத்தில் வந்த மணமக்கள், தங்கள் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த மணிகண்டன், தங்க மீனாட்சி ஆகியோருக்கு வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையுடன் மணமக்கள் எஸ்.ஏ.வி. பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் உள்ள காமராஜ் மெட்ரிக் பள்ளி வாக்குச் சாவடியில் மணமகன் விக்னேஷ் வாக்களித்தாா். தொடா்ந்து, மணமகள் அஜிதா, கணவருடன் சென்று சாா்லஸ் பள்ளியில் வாக்களித்தாா்.

கோவில்பட்டியைச் சோ்ந்த சுதா்சனா, தியாகராஜன் ஆகிய மணமக்கள், இலக்குமி ஆலை தொடக்கப் பள்ளி (கிழக்கு) வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

கோவில்பட்டியைச் சோ்ந்த சுவேதாரணி, உமா சங்கா் ஆகிய மணமக்கள், பூவலிங்க செட்டியாா் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.