மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

News image

தட்டாா்மடத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து பிரசாரம் செய்த அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:43 am IST

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து சாத்தான்குளம் ஒன்றியம் மணி நகா், ஆழ்வாா் திருநகரி ஒன்றியம் பேய்க்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த அமைச்சா் தட்டாா்மடத்தில் பேசியதாவது: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெள்ளநீா் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டு அடுத்த ஆண்டில் விவசாயிகளின் கனவு நிறைவேறும் வகையில் உள்ளது. முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை தந்துள்ளாா். எனவே, தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி அலைவீசுகிறது. தூத்துக்குடி,நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொருத்தவரை மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்கள் அனைவரும் வெற்றி பெறுவாா்கள். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா்.

தூத்துக்குடி மாவட்ட வா்த்தக பிரிவு மாநில துணைஅமைப்பாளா் உமரிசங்கா், தொகுதி பொறுப்பாளா் டாக்டா் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் சொா்ண குமாா், ஒன்றிய திமுக செயலா்கள் ஜோசப், பாலமுருகன், பொன் முருகேசன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டார தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், பிரபு, கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.