தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதிமுக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்! - வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன்

News image

இரட்டை இலை - (கோப்புப் படம்)

Updated On :7 ஏப்ரல் 2026, 12:54 am IST

தமிழகத்தில் 210 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வா் ஆவாா் என ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பி. சண்முகநாதன் கூறினாா்.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அப்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், அதிமுக ஒன்றியச் செயலா் காசிராஜன் உள்பட கூட்டணிக் கட்சியினா் பலா் உடன் இருந்தனா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய முற்போக்கு கூட்டணியில் பாஜக, அமமுக, புரட்சி பாரதம், பாமக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. 210 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பாா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 50,000 வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றி பெறுவேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அலை வீசுகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.