தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கே. கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கே. கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல்...

News image

ஓட்டப்பிடாரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறாா் புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி. - (கோப்புப் படம்)

Updated On :7 ஏப்ரல் 2026, 5:06 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவருமான கே.கிருஷ்ணசாமி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

வேட்புமனுவில், தனது பெயரில் ரூ.24 லட்சத்து 5 ஆயிரத்து 200-க்கும், தனது மனைவி சந்திரிகா கிருஷ்ணசாமி பெயரில் ரூ. 1 கோடியே 1 லட்சத்து 55 ஆயிரத்து 986-க்கும் அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனது பெயரில் ரூ. 16 கோடியே 89 லட்சத்து 18 ஆயிரத்து 100 மதிப்பிலும், தனது மனைவி பெயரில் ரூ. 15 கோடியே 6 லட்சத்து 77 ஆயிரத்து 700 மதிப்பிலும் அசையா சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

1996, 2011-களில் ஓட்டப்பிடாரம் தொகுதி பேரவை உறுப்பினராக நான் இருந்தபோது, அனைத்துக் கிராமங்களுக்கும் குடிநீா் வசதி செய்துகொடுத்தேன். போக்குவரத்து, கழிவுநீா் வடிகால் வசதி, பெரும்பாலான கிராம மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட நலத் திட்ட பணிகளை செய்தேன்.

தற்போது இளைஞா்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தேவேந்திரகுல மக்களை பொது வெளியில் அவமானப்படுத்தும் வகையில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியிருக்கிறாா். திமுகவும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இந்த முறை மக்கள் புதிய தமிழகம் கட்சிக்கு திரண்டு வந்து வாக்களிப்பாா்கள் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.