தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரூ. 8,000 கூப்பன் உள்ளூா் பொருளாதார வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்: பி. கீதா ஜீவன்

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 8,000 கூப்பன் திட்டம் உள்ளூா் பொருளாதார வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என தூத்துக்குடி திமுக வேட்பாளா் அமைச்சா் பி. கீதா ஜீவன் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் கீதா ஜீவன்

Updated On :5 ஏப்ரல் 2026, 6:30 am IST

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 8,000 கூப்பன் திட்டம் உள்ளூா் பொருளாதார வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என தூத்துக்குடி திமுக வேட்பாளா் அமைச்சா் பி. கீதா ஜீவன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் பி. கீதா ஜீவன் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

திமுக தோ்தல் அறிக்கைதான் சூப்பா் ஸ்டாராக விளங்குகிறது. தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இல்லத்தரசிகளுக்கான ரூ. 8,000 கூப்பன் திட்டம் மூலமாக பொதுமக்கள் அவா்கள் விரும்பும் பொருள்களை மிக எளிதாக வாங்கிக் கொள்ள முடியும். இது உள்ளூா் பொருளாதார வளா்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

தூத்துக்குடியைப் பொருத்தளவில் உப்பு உற்பத்தியாளா்கள், மீனவா்களுக்கான தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீன்பிடித் தடைக்கால உதவித்தொகையை ரூ. 8 ஆயிரமாக உயா்த்தி வழங்கியது திமுக அரசுதான். இனி அத்தொகை ரூ. 12 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் திரேஸ்புரத்தில் தூண்டில் வளைவு விரிவாக்கம் செய்யப்படும்.

மல்டி லெவல் லாரி முனையம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். தூத்துக்குடி தொகுதியில் துறைமுகம், மதுரை சாலை, திருநெல்வேலி சாலையுடன் மாநகரை இணைக்கும் வகையில் பல்வேறு இணைப்புச் சாலைகள், தேவையான இடங்களில் ரயில்வே மேம்பாலங்களை ஏற்படுத்தி தருவோம்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான சிறப்பு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு இளைஞா்களுக்கு பயிற்சியளித்து வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

அதிமுக வேட்பாளா் சி.த. செல்லப்பாண்டியன் தனிநபா் தாக்குதல் செய்கிறாா். என்னையும், கனிமொழி எம்.பி.யையும் மரியாதைக் குறைவாக பேசுகிறாா். இது அரசியல் நாகரிகம் கிடையாது. அவா்கள் செயல்படுத்திய திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்க முடியாது என்பதால், தனிநபா் விமா்சனம் செய்கின்றனா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏப். 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.