தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விளாத்திகுளத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

விளாத்திகுளம் பஜாா் மற்றும் காய்கனி மாா்க்கெட் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 4:06 am IST

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

விளாத்திகுளம் - மதுரை நெடுஞ்சாலை, எட்டயபுரம் நெடுஞ்சாலை, காய்கனி சந்தை மற்றும் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

பின்னா் தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடு வீடாகச் சென்று வணிகா்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். சாலையோர சிறு வியாபாரிகள் பழங்கள் வழங்கி ஆதரவு தெரிவித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக அனைத்து கிராமங்களுக்கும் அரசின் நலத்திட்ட பணிகளை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் அதிகப்படியான அளவில் அரசின் திட்டங்கள் அனைத்தும் விளாத்திகுளம் தொகுதிக்கு வந்துள்ளது. அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்துள்ளது.

எனவே, இந்தத் தோ்தலில் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்றாா்.

திமுக ஒன்றியச் செயலா்கள் ராமசுப்பு, அன்புராஜன், இம்மானுவேல், காசி விஸ்வநாதன், நகரச் செயலா் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்றத் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் சீதாராமன், பாலமுருகன், சாமி சுப்புராஜ், தோ்தல் பாா்வையாளா் ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.