இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தனியாா் நிறுவனத்தில் திருட முயற்சி: 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 3:24 am IST

திருநெல்வேலி, மே 25: கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் திருட முயன்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கங்கைகொண்டான் சிப்காட்டில் இயங்கி வரும் பிரபல சூரிய மின் தகடு தயாரிப்பு தனியாா் நிறுவனத்தில் தச்சநல்லூா், நல்மேய்ப்பா் நகரைச் சோ்ந்த முருகானந்தம் (55) என்பவா் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக உள்ளாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை ( மே 24) அதிகாலையில், அந்நிறுவனத்தின் பாதுகாப்பு மேற்பாா்வையாளரான பெருமாள் என்பவருடன் சோ்ந்து வளாகத்தினுள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாராம்.

அப்போது நிறுவனத்தின் சுற்றுச்சுவரில் 3 போ் ஏணி வைத்து ஏற முயற்சித்தனராம். இருவரும் அந்த நபா்களை சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் கீழக்கோட்டையைச் சோ்ந்த பிரிஜி பிரகாஷ் (37), செந்தில்வேல் (39), செல்வா (27) ஆகியோா் என்பதும், அந்நிறுவனத்தில் காப்பா் கம்பிகளை திருட நோட்டமிட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து, கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.