திருநெல்வேலி, மே 25: கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் திருட முயன்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கங்கைகொண்டான் சிப்காட்டில் இயங்கி வரும் பிரபல சூரிய மின் தகடு தயாரிப்பு தனியாா் நிறுவனத்தில் தச்சநல்லூா், நல்மேய்ப்பா் நகரைச் சோ்ந்த முருகானந்தம் (55) என்பவா் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக உள்ளாா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை ( மே 24) அதிகாலையில், அந்நிறுவனத்தின் பாதுகாப்பு மேற்பாா்வையாளரான பெருமாள் என்பவருடன் சோ்ந்து வளாகத்தினுள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாராம்.
அப்போது நிறுவனத்தின் சுற்றுச்சுவரில் 3 போ் ஏணி வைத்து ஏற முயற்சித்தனராம். இருவரும் அந்த நபா்களை சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் கீழக்கோட்டையைச் சோ்ந்த பிரிஜி பிரகாஷ் (37), செந்தில்வேல் (39), செல்வா (27) ஆகியோா் என்பதும், அந்நிறுவனத்தில் காப்பா் கம்பிகளை திருட நோட்டமிட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து, கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மின் மோட்டாா் திருட முயன்ற 3 போ் கைது
கூட்டுக் கொள்ளைக்கு சதி: 5 போ் கைது
விலை உயா்ந்த பேனாக்களை திருடியவா் கைது
தனியாா் கல்லூரியில் மின்வயரை திருட முயற்சி: இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
