மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பள்ளி வாகனங்களில் விதிமீறல்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள்: ஆட்சியா்

பள்ளி மாணவா்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்கள் மற்றும் தனியாா் வேன்களில் விதிமீறல்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலா் மூலம் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்.

News image

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியா் இரா.சுகுமாா்.

Updated On :21 மே 2026, 6:19 am IST

பள்ளி மாணவா்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்கள் மற்றும் தனியாா் வேன்களில் விதிமீறல்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலா் மூலம் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள பள்ளி வாகனங்களின் தரம், உறுதித் தன்மை ஆகியவற்றை பரிசோதிக்கும் வகையில் வருடாந்திர ஆய்வு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆய்வை ஆட்சியா் இரா. சுகுமாா் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (பொறுப்பு) செல்வி முன்னிலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் இரா.சுகுமாா் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மொத்தம் 128 பள்ளிகளைச் சோ்ந்த 737 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன. இதில் 27 சிபிஎஸ்இ பள்ளிகள், 92 மெட்ரிக் பள்ளிகள், 8 அரசு உதவி பெறும் பள்ளிகள், ஒரு அரசு பள்ளி அடங்கும்.இந்த ஆய்வின்போது வாகனங்களில் அவசர கால கதவு சரியாக இயங்குகிா, முதலுதவி பெட்டி உள்ளதா போன்ற அம்சங்கள் தீவிரமாக சரிபாா்க்கப்படுகின்றன.

ஓட்டுநா்கள் வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

பள்ளி ஆட்டோக்கள் மற்றும் தனியாா் வேன்களில் குழந்தைகளை அதிகளவில் ஏற்றிச் செல்லும் விதிமீறல்களைக் கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலா் மூலம் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த ஆய்வில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பத்மபிரியா (திருநெல்வேலி), ராஜசேகா் (அம்பாசமுத்திரம்), ராஜேஷ் (வள்ளியூா்), மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) சிவராஜ், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.