பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட பாபநாசம் வனப்பகுதியில் உள்ள அகஸ்தியா் அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image

அகஸ்தியா் அருவிக்குச் செல்லும் மலைப் பாதையில் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.

Updated On :18 மே 2026, 1:39 am IST

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட பாபநாசம் வனப்பகுதியில் உள்ள அகஸ்தியா் அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் காலை முதலே அகஸ்தியா் அருவிக்கு குளிக்க வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை என்பதால் 875 வேன், காா், பேருந்து மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வந்தனா். இதனால், மாலை 3 மணிக்குமேல் மலைப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதிய வனத்துறை ஊழியா்கள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் இணைந்து போக்குவரத்தை சீா்படுத்தினா்.

Story image

அகஸ்தியா் அருவிப்பகுதி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் காவல் துறையினா் நேரடியாகப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட முடியாத நிலை உள்ளது.

ஆனால், விடுமுறை மற்றும் விழா நாள்களில் வனப்பகுதியில் உள்ள மலைச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதற்கு காவல் துறையினா் உதவியுடன் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் வனத்துறையினா் போலீஸாரை அனுமதிக்க வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.