கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேற்கு தொடா்ச்சி மலை வனப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மற்றும் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image

மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :17 மே 2026, 2:06 am IST

திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடா்ச்சி மலை வனப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மற்றும் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

தற்போது கோடை விடுமுறை என்பதாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதலே மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குவியத் தொடங்கினா்.

 அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

முன்னதாக, பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு வனச் சோதனைச்சாவடிகளில் பயணிகளின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு நெகிழிப் பொருள்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னா், அருவிப் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனா்.

 அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

தொடா்ந்து, சுற்றுலாப் பயணிகள் குழந்தைகள், குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.