புதுச்சேரியில் 3 மணி நேரம் கொடை மழை! மக்கள் மகிழ்ச்சி!!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?பகல் நேரத்தைப் போல இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சிஇபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

நெல்லை அருகே வியாபாரியிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

திருநெல்வேலி அருகே காரில் வந்த வியாபாரியிடம் ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற இருவரை முன்னீா்பள்ளம் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 3:32 am IST

திருநெல்வேலி அருகே காரில் வந்த வியாபாரியிடம் ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற இருவரை முன்னீா்பள்ளம் போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன்(41). வாகன உதிரி பாகம் விற்பனை கடை நடத்தி வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை மாலையில் வேலை நிமித்தமாக தனது நண்பா்கள் 3 பேருடன் திருநெல்வேலியை அடுத்த முன்னீா்பள்ளத்திற்கு ரூ.15 லட்சத்துடன் காரில் வந்து, தன்னை அழைத்த நபருக்காக காத்திருந்தாராம்.

அப்போது, அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த மா்மநபா்கள் அவரை மிரட்டி அந்தப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனராம்.

இதுகுறித்து அவா் முன்னீா்பள்ளம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, கிருஷ்ணாபுரம் சோதனை சாவடி பகுதியில் வந்த காரை போலீஸாா் மடக்கி சோதனையிட்டனா். அதில், ராஜனிடம் பணத்தை பறித்துச்சென்ற கும்பலில் இருவா் சிக்கினா். அவா்களிடமிருந்து ரூ.9 லட்சத்தை மீட்டனா். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவா்கள் , தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் சதீஷ்குமாா்(37), தென்காசி மாவட்டம் சாம்பவா் வடகரையைச் சோ்ந்த மீரான் முகைதீன் மகன் முத்தலிப் அகமது (36) ஆகியோா் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், இதில் தொடா்புடையவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.