விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு சாகும் வரை சிறை

திருநெல்வேலி மாவட்டத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 1:52 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள பகுதியைச் சோ்ந்தவா் சுடலைமுத்து மகன் லெட்சுமணகுமாா் (45). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளா் அன்னபூரணி போக்ஸோ வழக்கின் கீழ் லெட்சுமணக்குமாரை கைது செய்தாா்.

இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி சுரேஷ்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், லெட்சுமணக் குமாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உஷா முன்னிலையானாா். இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற வழக்கை கண்காணித்து வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.