ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு மற்றும் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

சட்டப்பேரவை தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக வள்ளியூரில் உறுதிமொழி ஏற்றோா்.

Updated On :26 மார்ச் 2026, 4:27 am IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு மற்றும் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பது, சிவிஜில் செயலி பயன்பாடுகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வள்ளியூா் பூங்காநகா் பகுதியில் இருந்து பிரதான சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

பேரணிக்கு ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலருமான ராஜசெல்வி தலைமை வகித்தாா். அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் சுயஉதவிக்குழுவினா், டிஎன் ரைட்ஸ் தன்னாா்வலா்கள், கிறிஸ்டோபா் செவிலியா் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து மனிதச் சங்கிலி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை தன்னாா்வலா் சபேசன் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.