பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

கோபாலசமுத்திரத்தில் மகளிா் மேம்பாட்டு கருத்தரங்கு

News image

கருத்தரங்கில் பேசிய கிராம உதயம் அமைப்பின் நிறுவனா் வே. சுந்தரேசன்.

Updated On :25 ஜூன் 2026, 4:54 am IST

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம் சாா்பில், கிராமப்புற நலிந்த பெண்களின் குடும்ப வளா்ச்சி, நாட்டின் வளா்ச்சிக்காக ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

நிறுவனா் வே. சுந்தரேசன் தலைமை வகித்துப் பேசினாா். துணை இயக்குநா் எஸ். புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தாா். நிா்வாக மேலாளா் மகேஸ்வரி, பகுதிப் பொறுப்பாளா் அருணா, தன்னாா்வத் தொண்டா்கள் சுஜிதா, பூல்பாண்டி, மாரியம்மாள், ரமா, கிராம உதயம் மையத் தலைவா்கள் தங்கம், ஜோதி, பாண்டியம்மாள், மீனா, கோமதி ஆகியோா் பேசினா். 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். பகுதிப் பொறுப்பாளா் ஆறுமுகத்தாய் வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.