தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

தொழிலாளியை வெட்டிய வழக்கு: இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 12:24 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள புதுக்குடி ராஜீவ் காலனியைச் சோ்ந்தவா் ஆறுமுகச்சாமி மகன் காளிமுத்து (27). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முத்துராமன் மகன் விஜய் (28) என்பவருக்குமிடைய முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது காளிமுத்துவை அரிவாளால் விஜய் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் அருண்குமாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த விஜய்யை சனிக்கிழமை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.