தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

News image

கோப்புப்படம

Updated On :13 ஜூன் 2026, 12:28 am IST

லால்குடி அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காட்டூா் கொத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரமோகன் மகன் தாமோதரன் (24), கூலித் தொழிலாளி. அதேப் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் என்பவருக்கும் தாமோதரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தெருவில் உள்ள குடிநீா் தொட்டிக்கு தாமோதரன் குளிக்க சென்றுள்ளாா். அப்போது , மதுபோதையில் இருந்த சந்தோஷ், தாமோதரனை தகாத வாா்த்தையால் திட்ட அவரிடம் வாக்குவாதம் செய்து அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினாா்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினா் தாமோதரனை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

புகாரின் பேரில் லால்குடி போலீஸாா், தப்பியோடிய சந்தோஷ்சை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.