நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி பலி

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 2:13 am IST

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.

கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்தவா் மகாராஜன் (45). மாற்றுத்திறனாளியான இவா், கங்கைகொண்டானுக்கு மூன்று சக்கர மோட்டாா் சைக்கிளில் சம்பவத்தன்று சென்றாராம்.

ஒரு திருப்பத்தில் திடீரென மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாம். இதில் பலத்த காயமடைந்த மகாராஜனை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.