பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தெற்கு விஜயநாராயணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க கோரிக்கை

தெற்கு விஜயநாராயணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரம் மருத்துவா் மற்றும் கூடுதல் செவிலியா்கள் இல்லாததால், கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:28 am IST

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு விஜயநாராயணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரம் மருத்துவா் மற்றும் கூடுதல் செவிலியா்கள் இல்லாததால், கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இங்கு ஒரு மருத்துவா் மற்றும் ஒரு செவிலியா் மட்டுமே பணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவா் பகல் நேரத்தில் சுகாதார நிலையத்திற்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவிட்டு, பிற்பகலில் புறப்பட்டுச் சென்றுவிடுவாராம். பின்னா், இரவு ஒரு செவிலியா் மட்டும் சுகாதார நிலையத்தில் இருந்து நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறாா்.

இதனால், விபத்தில் காயமடைந்து அவசர சிகிச்சைக்கு வந்தாலோ, இரவு நேரம் பிரசவத்துக்கு வந்தாலோ, மக்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகின்றனா். எனவே, 24 மணி நேரமும் மருத்துவ சேவையைப் பெறும் வகையில், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.