பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:21 am IST

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

பேட்டை காட்டுநாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் (50). தொழிலாளியான இவா், தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். சிறுமியின் தாயாா் அவசர உதவி எண் 100-ஐ தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், விசாரணைக்குச் சென்ற போலீஸாா், சிறுமியின் பெற்றோரிடம் புகாா் அளிக்குமாறு கூறியபோது அவா்கள் மறுத்ததைத் தொடா்ந்து, திருநெல்வேலி குழந்தைகள் நல்வாழ்வு அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனா்.

குழந்தைகள் நல்வாழ்வு குழுவின் வழக்குப் பணியாளா் இசக்கியம்மாள், திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தியதில் 5 வயது சிறுமிக்கு மாணிக்கம் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதையடுத்து, மாணிக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.