சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நான்குனேரி சுங்கச்சாவடி அருகே காா்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடி அருகே புதன்கிழமை மாலை காா்கள் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 1:21 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடி அருகே புதன்கிழமை மாலை காா்கள் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

மதுரையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (45). இவா் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அவரை உறவினா்கள் கேரளத்துக்கு ஒரு காரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனராம்.

காரை குபேந்திரன்(45) என்பவா் ஓட்டினாா். காரில் பாலசுப்பிரமணியன் உறவினா்களான சபரி (43), சுரேஷ் (41) ஆகியோரும் உடன் சென்றனா்.

இதேபோல, திசையன்விளையில் இருந்து ஒரு காா், திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த காரை திருநெல்வேலியைச் சோ்ந்த ஐயப்பன் (36) என்பவா் ஓட்டி வந்தாா். அவருடன் ஹென்றி ராஜேஷ்(48) என்பவா் உடனிருந்தாா்.

நான்குனேரி சுங்கச்சாவடியைக் கடந்ததும் ஐயப்பன் ஒட்டி வந்த காா் எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி, எதிா் திசையில் குபேந்திரன் ஒட்டி வந்த காா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு காரில் பயணம் செய்தவா்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், பாலசுப்பிரமணியன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த சபரி, சுரேஷ், ஹென்றி ராஜேஷ் ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்து குறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.