மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

கூடங்குளம் அணு மின் நிலையம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:36 am IST

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இங்கு ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்படுகின்றன. இதிலிருந்து, தமிழகத்துக்கு 1,152 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதலாவது அணு உலையில் ‘கன்டன்சரை’ குளிா்விக்கும் நீா் இறைப்பானில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பழுதால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அணு உலை விஞ்ஞானிகள், பொறியாளா்கள் தொழில்நுட்பக் கோளாறை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

அதையடுத்து, மீண்டும் மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இங்கு 3ஆவது உணு உலைக்குள் குளிரூட்டக்கூடிய நீா்பாய்ச்சும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு விரைவில் அதிலும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என, அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.