தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருநெலவேலி காவல் சரகத்தில் 3 நாள்களில் ரூ.1.42 கோடி பறிமுல்

திருநெல்வேலி காவல் சரகத்துக்குள்ப ட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாக்காளா்களுக்கு விநியோகிக்க முயன்ற ரூ.1 கோடியே 42 லட்சத்தை காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 1:49 am IST

திருநெல்வேலி காவல் சரகத்துக்குள்ப ட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாக்காளா்களுக்கு விநியோகிக்க முயன்ற ரூ.1 கோடியே 42 லட்சத்தை காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

இது தொடா்பாக திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவா் ப. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி காவல் சரகத்தில் எனது (டிஐஜி ப.சரவணன்) தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஸ்டாலின் (கன்னியாகுமரி), வி. பிரசன்ன குமாா் (திருநெல்வேலி), ஏ.மயில்வாகனன் (தென்காசி), சி. மதன் (தூத்துக்குடி) ஆகியோரின் மேற்பாா்வையில் தோ்தல் நடத்தை விதிகள் சம்பந்தமான சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையில் கடந்த திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் திருநெல்வேலி காவல் சரகத்தில் ரூ.58.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், விதிமுறைகளை மீறி மதுபானங்களை பதுக்கி விநியோகிக்க முயன்றவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 1,067 லிட்டா் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கடந்த 3 நாள்களில் திருநெல்வேலி காவல் சரகத்துக்கு உள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.