விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நெல்லை தொகுதியில் அதிமுக, திமுக, தவெக வேட்புமனுக்கள் ஏற்பு

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட 25 வேட்பாளா்களின் சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 21 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News image

திருநெல்வேலி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியருமான பிரியா தலைமையில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனை.

Updated On :8 ஏப்ரல் 2026, 2:16 am IST

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட 25 வேட்பாளா்களின் சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 21 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

திருநெல்வேலி தொகுதியில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட 25 வேட்பாளா்களின் சாா்பில் 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான பரிசீலனை திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான பிரியா தலைமையில் நடைபெற்றது.

அப்போது, அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா, திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன், தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சத்யா, புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் ஷியாம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 25 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுவை திரும்பப் பெற வியாழக்கிழமை (ஏப். 9) மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.