தென்காசி மாவட்ட குவாரிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என கனிமவளத் துறை அமைச்சா் டி.கே.பிரபுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி.விபின் சக்கரவா்த்தி கனிம வளத்துறை அமைச்சா் டி.கே.பிரபுவை வியாழக்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம்:
ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் சுமாா் 30 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து முறையான அனுமதியின்றி கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. இதனால், இப்பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது.
பாறைப் பொடிகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. வெளி மாநில கனரக வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன. இதனால், குவாரிகளில் இருந்து உள்ளூா் தேவைகளுக்கு மட்டுமே கனிம வளங்கள் எடுக்க வேண்டும், வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுமக்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதே உண்மையான வளா்ச்சி: அமைச்சா் டி.கே. பிரபு

கனிம வளம் கடத்த முயற்சி: டிராக்டா்கள் பறிமுதல்

கனிம வளங்கள் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

மெட்ரோ ரயில்களில் சிக்கி இழுத்து செல்வதைத் தடுக்க சாதனம் அமைப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

