தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தென்காசி மாவட்டத்தைக் கைப்பற்றிய திமுக

தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் நான்கினை கைப்பற்றி தனது கோட்டையாக திமுக மாறியுள்ளது.

News image
Updated On :6 மே 2026, 1:41 am IST

தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் நான்கினை கைப்பற்றி தனது கோட்டையாக திமுக மாறியுள்ளது.

இம்மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூா், ஆலங்குளம், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன.

இதில், சங்கரன்கோவில் காங்கிரஸ் கட்சிக்கும், கடையநல்லூா் மதிமுகவிற்கும் திமுக ஒதுக்கியது.

தென்காசியில் திமுக சாா்பில் தொகுதி பொறுப்பாளா் டாக்டா் கலைகதிரவனும், ஆலங்குளத்தில் பால்மனோஜ்பாண்டியனும், வாசுதேவநல்லூரில் அக்கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா ஆகியோா் போட்டியிட்டனா்.

இதில், கலைகதிரவன் 79699 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளா் செல்வமோகன்தாசை 10,299 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

கடையநல்லூா் தொகுதியில் மதிமுக வேட்பாளா் தி.மு.இராஜேந்திரன் 79,832 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளா் செ.கிருஷ்ணமுரளியை 6,253 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக வேட்பாளா் ஈ.ராஜா 6,3045 வாக்குகள் பெற்று, பாஜக வேட்பாளா் ஆனந்தன்அய்யாசாமியை 6,583 வாக்குகளில் தோற்கடித்தாா்.

ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளா் மனோஜ்பாண்டியன் 69,170 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளா் கே.ஆா்.பி.பிரபாகரனை 7,798 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

இம்மாவட்டத்தில் 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் தென்காசியில் காங்கிரஸ், கடையநல்லூா், ஆலங்குளத்தில் அதிமுக, வாசுதேவநல்லூரில் மதிமுக, சங்கரன்கோவிலில் திமுக வென்றிருந்தன.

தமிழகம் முழுவதும் தவெக வேட்பாளா்கள் வெற்றிபெற்றாலும் தென்காசி மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளில் 4 தொகுதிகளைக் கைப்பற்றி தென்காசி மாவட்டத்தினை திமுக கோட்டையாக அக்கட்சியினா் மாற்றியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.