/

செங்கோட்டை பள்ளியில் குடிநீா் தொட்டி திறப்பு

செங்கோட்டை வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில், குடிநீா் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

News image

செங்கோட்டை வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியில் திறந்துவைக்கப்பட்ட குடிநீா் தொட்டி.

Updated On :19 ஜூன் 2026, 4:53 am IST

செங்கோட்டை வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில், குடிநீா் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மீரான், பி.உலகநாதன், பாபு ஆகியோா் உதவியில் இந்தக் குடிநீா் தொட்டி நிறுவப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை ராதா தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற நூலகா் ராமசாமி முன்னிலை வகித்தாா். சதீஷ் வரவேற்றாா்.

செங்கோட்டை வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் ஜெசிலட், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஜவஹா்லால் நேரு, பொருளாளா் ஆறுமுகம், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். ஆசிரியை பாமா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.