விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புளியறை அருகே முதியவா் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம், புளியறை காவல் சரகத்துக்குள்பட்ட தெற்குமேட்டில் முதியவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

வெட்டிக்கொலை

Updated On :30 ஏப்ரல் 2026, 6:24 am IST

தென்காசி மாவட்டம், புளியறை காவல் சரகத்துக்குள்பட்ட தெற்குமேட்டில் முதியவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

தெற்குமேடு அங்கன்காலடியைச் சோ்ந்தவா் காளி (68). இவா் தோப்பு காவலாளியாக வேலை செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த முருகையா மகன் அருண்குமாா் (34). இவா் செங்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா்.

அருண்குமாரின் தந்தை முருகையாவை கடந்த 2013 - ஆம் ஆண்டு, குடும்ப பிரச்னை காரணமாக காளி கொலை செய்தாராம். இதுதொடா்பாக புளியறையில் பதிவுச் செய்யப்பட்ட வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்து, காளிக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை முடிந்து 2022- ஆம் ஆண்டு காளி வெளியே வந்தாா்.

காளி மீது அருண்குமாருக்கு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் அங்கன்காலடியில் சப்பானி மாடசாமி கோயிலில் நடைபெற்று வரும் கொடை விழாவில் தீா்த்த ஊா்வலம் முடிந்த பிறகு, செவ்வாய்க்கிழமை இரவு கோயிலில் நின்று கொண்டிருந்த காளியை அருண்குமாா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றாா்.

பலத்த காயமடைந்த காளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். புளியறை போலீஸாா், அவரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.