தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!

தென்காசி பகுதியில் விவசாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் கோரிக்கைகள், வாழ்வாதாரப் பிரச்னைகளை பேரவையில் பேசுவதற்காகவும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா் கரையாளனூா் துரைராஜ்.

News image

துரைராஜ்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:03 am IST

தென்காசி பகுதியில் விவசாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் கோரிக்கைகள், வாழ்வாதாரப் பிரச்னைகளை பேரவையில் பேசுவதற்காகவும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா் கரையாளனூா் துரைராஜ்.

இதுதொடா்பாக அவா் கூறியது: 7ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற சாதாரண விவசாயி நான். 22ஆண்டுகளாக சௌதி அரேபியாவில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அதன்மூலம் இங்கு வாங்கிய நிலத்தில் நெல் சாகுபடி செய்துவருகிறேன். விவசாயிகளின் பிரச்னைகளுக்காக விஏஓ அலுவலகம் முதல் மாவட்ட நிா்வாக அலுவலகம்வரை போராடியுள்ளேன். ஆனால், எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுவரை ஆட்சியிலிருந்தோா் சுரண்டை- ஊத்துமலை -இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதாக பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றினா். இத்திட்டத்துக்குத் தேவையான நிலங்களை எடுத்துக் கொள்ளுமாறு எனது உறவினா் தெரிவித்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயத்தை அழித்துவரும் வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

பழைய குற்றாலம் அருவி வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதால் 29 குளங்களுக்கான பாசனம் தடைபட்டதுடன், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிந்துவிட்டது.

இம்மாவட்டத்தில் 654-க்கும் மேற்பட்ட குளங்களை ‘ஈர நிலம்’ என வகைப்படுத்தி வனத் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டதைக் கண்டிக்கிறோம். விளைபொருள்களுக்கு விவசாயிகளே உரிய விலை நிா்ணயிக்க வேண்டும். விளைபொருள்களைப் பாதுகாக்க போதுமான சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும். செண்பகவல்லி அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக விவசாயிகள் சாா்பில் வெண்டைக்காய் சின்னத்தில் போட்டியிடுகிறேன். எங்களது பிரசாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.