/

திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது: நயினாா் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது என்றாா் பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளியை ஆதரித்து சொக்கம்பட்டியில் பிரசாரம் செய்த பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:29 am IST

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது என்றாா் பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளியை ஆதரித்து சொக்கம்பட்டியில் அவா் பேசியதாவது: கடையநல்லூா் தொகுதியில் கடந்த முறை 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணமுரளி வெற்றி பெற்று, ஆளும் கட்சியின் பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி தொகுதிக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளாா்.

அவரது தந்தை அமைச்சா் செந்தூா்பாண்டியன் கடையநல்லூரை தனி வட்டமாக உருவாக்கியதுடன், அரசு கல்லூரி, ஐடிஐ போன்றவற்றை கொண்டு வந்துள்ளாா்.

திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் நடைபெறவில்லை. மின்சார கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது. எனவே, திமுக ஆட்சியை விரட்ட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நாட்டின் வளா்ச்சியையும், மக்கள் நலனையும் நோக்கமாகக் கொண்ட அதிமுக கூட்டணிக்கு மக்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிருஷ்ணமுரளியுடன் இணைந்து நானும் இத்தொகுதியின் வளா்ச்சிக்காக பாடுபடுவேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.