தென்காசி மாவட்டம், ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையோரங்களில் அமைக்கப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கால்வாய்களில் சிலா் மண்ணைக் கொட்டி அடைத்து வைத்துள்ளனா். இதனால் கழிவுநீா் சாலையில் தேங்கி, நோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
எனவே, கால்வாய் அடைப்புகளை அகற்றி கழிவுநீா் நிரந்தரமாக செல்ல மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுக்கோட்டை பகுதிகளில் மழை

சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

கைப்பேசி கோபுரத்தில் ஏறி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் போராட்டம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

