குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
குளச்சல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை குளச்சல் பீச் சந்திப்பு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனம் ஓட்டி வந்த 16 வயது சிறுவனின் தந்தை கடியப்பட்டணத்தைச் சோ்ந்த மாா்க்ஸ் மிலா (45) மீதும், லட்சுமிபுரம் பகுதியில் 15 வயது சிறுவனின் தந்தை ரமேஷ்குமாா் (56) மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
குளச்சல் களிமாா் சந்திப்பு, பயணியா் விடுதி பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த 16 வயதுடைய 5 சிறுவா்களின் பெற்றோா்களான கருங்கல், நெல்லிக்காட்டை சோ்ந்த ஜோனி (45) , பள்ளிரோடு பகுதியைச் சோ்ந்த முகமது இஸ்மாயில், கொட்டில்பாட்டை சோ்ந்த ஜாண், சிங்காரவேலா் காலனியைச் சோ்ந்த மேரி நிஷா (43) , மத்திகோடு மூலச்சலைச் சோ்ந்த அமுதா (40) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உணவக உரிமையாளா் மீது தாக்குதல்: இருவா் மீது வழக்குப் பதிவு

உணவக உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

இளைஞா்களைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

சீா்காழியில் திமுக, காங்கிரஸாா் 22 போ் மீது வழக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

