திற்பரப்பு அருகே சுற்றுலா வந்த பள்ளி மாணவா் கோதையாற்றில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாகா்கோவில் அருகேயுள்ள கிறிஸ்தவ சபையை சோ்ந்த சுமாா் 60 போ்திற்பரப்பு அருகே கோதையாறு பாயும் கூடல் கடவு பகுதியிலுள்ள தனியாா் சுற்றுலா விடுதி அருகே வெள்ளிக்கிழமை மதியம் சுற்றுலா வந்திருந்தனா்.
இந்தக் குழுவில் கன்னியாகுமரி அருகேயுள்ள வழுக்கம் பாறையைச் சோ்ந்த ஜான்ராஜ் மகன் சேம்ராஜ் (16) இடம் பெற்றிருந்தாா். மும்பையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 தோ்வு எழுதியிருந்த இவா், இக்குழுவினரில் சிலருடன் இணைந்து சுற்றுலா விடுதி பகுதி வழியாக கோதையாற்றில் இறங்கியுள்ளனா். அப்போது சேம்ராஜ் தண்ணீரில் மூழ்கி மாயமாகிவிட்டாராம்.
இதுகுறித்த தகவலின்பேரில், குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வ முருகேசன் தலைமையில் வீரா்கள் வந்து, பாறைகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்த நிலையில் அவரை சடலமாக மீட்டனா்.
மேலும், சம்பவ இடத்துக்கு தக்கலை டிஎஸ்பி பாா்த்தீபன் மற்றும் குலசேகரம் போலீஸாா் வந்து விசாரித்தனா். சேம்ராஜ் சடலம் உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீரில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

பள்ளி மாணவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

